Wednesday 18 April, 2007

5 ரூபா தாங்க ஸார்...

நான் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்ல படிச்சிட்டு இருந்தப்ப நடந்தது இது. அன்னிக்கு காலேஜ் அரை நாள்தான்றதால மதியம் 1 மணிக்கு திருவொற்றியூர் ஸ்டேஷனுக்கு எப்பயும் போல ஃப்ரெண்ட்ஸோட வந்தேன். (திருவொற்றியூர்லருந்து கொருக்குப்பேட்டை வரைக்கும் ரயில்ல போறது வழக்கம்.)எங்க கேங்ல நாகராஜ்ன்ற பையனும் நானும் நெறய விஷயங்கள டெக்னிகலா பேசுவோம். ஆனா மத்த பசங்க கலாய்க்கறதுலயே குறியாருப்பானுவன்றதால நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஸ்டேஷனோட ஒரு என்ட்லருந்து இன்னோர் என்ட்டுக்கு ஒரு ரவுன்ட் அடிச்சி பேசிட்டு மறுபடி கலாய்க்கிற கும்பலோட ஜோதில நான் ஐக்கியமாயிடுவேன்.

என்னிக்கும் போல அன்னிக்கும் ரவுன்ட் அடிச்சிட்டு, கும்பலோட போற வர்றவனையெல்லாம் வம்பிழுத்திட்டு ஒக்காந்திட்டிருந்த பசங்க கிட்ட நானும் நாகராஜும் வந்தோம். பார்த்தா அன்னிக்கு ஒரு ஆளு நின்னிட்டு இருந்தாரு. பார்க்க 24 வயசிருக்கும். கற படிஞ்ச லுங்கி சட்ட. லுங்கிய நிக்கர் தெரிய தூக்கி கட்டிருந்தாரு. கட்டம் போட்ட சட்ட. (அவங்க தாத்தா போட்டதான்னெல்லாம் கேட்காதீங்க). முடியெல்லாம் கலைஞ்சிருந்தது. ஒடம்பெல்லாம் தூசி. நூல் பட்டரையில வேலை செஞ்சிட்டு முகம் கழுவாம வந்தவர் மாதிரி இருந்தாரு. நாங்க போய் நின்ன நேரம் நம்ம தோழர்கள்ட்ட,"அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க ஸார்"ன்னு கேட்டுட்டிருந்தாரு. நான் என் ஃப்ரெண்ட் பின்னாடி சைடு வாங்கிட்டேன். நானும் நாகராஜும் அந்தாளுக்கு பின்பக்கமா நின்னுட்டிருந்தோம்.

(அந்தாளு எதாவது எடம் பேர சொல்லி ரயில் டிக்கெட் எடுக்க, ஏதாவது காரணம் சொல்லி காசு கேட்டிருக்காருன்னு புரிஞ்சுக்கிட்டேன்.) நம்மளையும் ஒருத்தர் ஸார்ன்னிட்டருன்ற காரணத்துக்காக தோழர்கள்ல ஒருத்தன் காசு கொடுக்க பேண்ட் பாக்கெட்ல கைய விட்டான். நான் பின்னாடியிருந்து "வேண்டான்டா, ஆளப் பார்த்தா நம்பற மாதிரி இல்ல"ன்னு கண்ணால சைகை காட்டினேன். அவன் என்னய கவனிக்குறத பார்த்த அந்தாளு திரும்பி என்னய பார்த்தாரு. நான் அத கண்டுக்கல. சரி கைய விட்டுட்டு காசில்லன்னா நல்லா இருக்காதுன்றதுக்காக 5 ரூபாய அவனும் கொடுத்திட்டான். வங்கிட்டு அந்தாளு போனப்புறம் ஏன்டா கொடுத்தன்னு தோழர்ட்ட கேட்டேன். விடு 5 ரூபதானேன்னு சொன்னான் அவன்.

போன 15 நிமிஷம் கழிச்சு அதே ஆளு திரும்ப எங்க கிட்ட வந்தாரு. வந்தவரு என்கிட்ட டிக்கெட்ட காட்டிட்டு தோழருக்கு ஒரு நன்றிய போட்டுட்டு போனாரு. "இவரப் போயி கெட்டவருன்டியேடா" இது தோழர் என்கிட்ட. நானும் சரி மனுஷன் நல்லவருதான்டான்னு சொல்லிட்டு விட்டுட்டேன். ரயில் வந்தது. ஏறும்போதுதான் நானத பாத்தேன். அதே ஆளு ஒரு பாட்டிகிட்ட எங்க கிட்ட காண்பிச்ச அதே டிக்கெட்ட அந்த பாட்டிகிட்ட காண்பிச்சிட்ருந்தாரு.

அத நான் அந்த தோழர்ட்ட காண்பிக்கல. மனுஷன் மனசு கஷ்டப் படும்ன்னு விட்டுட்டேன். இந்த உலகத்துல மத்தவன எப்படில்லாம் ஏமாத்தலாம்ன்ற வழிய ஏமாத்துறவங்க கண்டுபிடிச்சி வச்சிருக்காங்க. உதவி செய்யிறவங்களும் நாம செய்யிற உதவி சரியானவங்க கிட்ட போய்தான் சேருதான்றத உறுதி படுத்திட்டுதான் உதவணும் போல.

Friday 13 April, 2007

முனி குரை(றை) விமர்சனம்....

என்னைப் பொறுத்த வரைக்கும் சுமாரானத விட்டுட்டு ரொம்ப நல்லது, ரொம்ப மோசமானதுன்னு ரெண்டா பிரிச்சி ரெண்டு வழி காட்டுவேன்.
அதே மாதிரிதான் சினிமாலயும், ஒன்னு கண்டிப்பா பார்க்கவேண்டியது, இன்னொன்ன சொல்லத்தேவையே இல்ல மேல இருக்குற படத் தலைப்பப் பார்த்தா ஒங்களுக்கே புரிஞ்சுருக்குமே. இன்னொரு காமடி என்னன்னா? (இன்னும் காமெடிய ஆரம்பிக்கவே இல்லடா நாயேன்னு சொல்லுறது கேட்குது). இந்தப் படத்துல நான் பார்த்ததே கடைசி அரை மணி நேரந்தான். அதப் பார்த்தே பதிவப் போடத் தூண்டுன படத்தோட டைரடக்கருக்கு (டைரக்டர்தான். சத்தியமா படத்தோட டைரக்டர் யாருன்னு எனக்குத் தெரியாது), முதல் சலாம்... இப்போ நிகழ்ச்சிக்கு போலாமா... (இவ்வளவு டையலாக் விட்டதுக்கப்புறம், இன்னும் ஆரம்பிக்கவே இல்லயா நீயி...)

முடிவப்பார்த்தே கதைய முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்...(இப்ப வர்ர படங்களோட பேரு சைசுதான் கதையே). வழக்கமான கதையா இல்லாம இந்த படத்துல ஒரு புதுமைய செஞ்சிருக்காரு நம்ம டைரடக்கரு. என்னன்னு கேட்குறீங்கள? வழக்கமான மசாலா படத்துல வில்லானும் தாதா, ஹீரோவும் தாதா, அனால் இதுல வில்லன் தாதா ஆனா ஹீரொ பேயி. டைரக்டரை நான் டெவில் ஷோவுக்கு சிபாரிசு செய்யிறேன்... நம்ம பழய மோகினி (மோகினின்னா பேய், நடிகை இல்ல.) கதைய பேர மாத்தி முனின்னு வச்சி நம்ம காதுல ரீல சுத்துறான் அந்த டைரக்டர் மண்டைய்யன்...

எனக்கு தெரிஞ்சு படத்துல நடிச்சுருக்குறது ஸாரி வந்து போறது, லாரன்ஸ் (பேய் பிடித்த ஹீரோ), வில்லன் (பேரு தெரியாது. "காதல்" படத்துல சந்தியாவோட அப்பா), அவரோட தம்பி, வடிவேலு மாதிரி (வடிவேலுவ நடிக்க வக்க பட்ஜெட் பத்தலையா ப்ரொடியூசர் சார், அவரோட ஜெராக்ஸ்ன்னு சொல்லி வேற எவனயோ கூட்டி வந்து ரிஸ்க் ரஸ்க்கெல்லாம் ஏன்யா?), பேய ஓட்ற மும்பை முஸ்லிம் பாய் (சாமியாரு). அட நம்ம முக்கியமான நாய ச்சீ... பேய மறந்துட்டனே.. நம்ம ராஜ்கிரண் ஸார்தான்.

கதைக்கு வருவோம் (அதெல்லாம் வேற இருக்கா?). ராஜ்கிரணக் கொல்லுறாரு வில்லன், ராஜ்கிரண் பேர்ல வில்லனக் கொல்லுறாரு நம்ம லாரன்ஸ். இது ஒரு கதையடா ?. வில்லன பழி வாங்க லாரன்ஸ புடிச்சிக்குறாரு பேய் ராஜ்கிரண். வில்லன் முன்னாடியே அவரோட ஆள ஒரே குத்துல மட்டையாக்கி வில்லன் கிட்டயே வெலைக்கு சேர்ராரு பேய் பிடிச்ச லாரன்ஸ். இந்த சீனுக்கு முன்னாடியே அந்த வடிவேலோட ஜெராக்ஸ், "இவன் ஊதுவான், அவன் அடிப்பான், இவன் மட்டையாவான், நம்ம அய்யா வாய பொளப்பாரு"ன்னு டைரடக்கரோட கதைய்ய லீக் பண்ணி சஸ்பென்ஸ ஒடக்கிறான். யாருடா அந்த வசன கர்த்தா? (அப்படியெல்லாம் படத்துல எவனும் இல்ல போல)... வில்லன்கிட்டே வேல செய்ய நாற்காலிய எல்லாம் சக்தி மான் மாதிரி சுத்த விடுறாரு லாரன்ஸ். வித்தைக்கு மயங்குன வில்லனும் வேலைக்கு சேத்துக்குறாரு. அடுத்த சீன்லயே வில்லனோட தம்பிக்கு ஆப்பு வக்கிறாரு லாரன்ஸ் என்கிற முனி.

பேய் பிடிச்ச லாரன்ஸ் வில்லனோட தம்பிய கொல்ல பார்ல டான்ஸ் ஆட்றாரு. சாதாரணமாவே அவரு டான்ஸப்பத்தி சொல்லவேணா. இதுல பேய் வேற புடிச்சிருச்சி. சும்மா பறந்து பறந்து ஆடுறாரு. வில்லனோட தம்பிய போட்டுர்றாரு. இதப் பாத்த ஜெராக்ஸ் வடிவேலு வில்லன்கிட்ட சொல்ல, நெஞ்சில இருக்கிற ரத்தத்த உறிஞ்சி டபாய்க்கிறாரு லாரன்ஸ். ஆனா வில்லனோட பொண்ணு பேய வீடியோல புடிச்சி வில்லனுக்கு காட்டுறாங்க. (பேய வீடியோல புடிக்க முடியாதுன்னானுங்க, இப்ப பேயப் புடிக்க புதுசா கேமரா வந்துருக்கு போல). இத பார்த்து ஜெர்க்-ஆகுற வில்லன் கூப்பிடுறது நம்ம யாரும் அறியாத மும்பை முஸ்லிம் பாயி. பேய் ஓட்றவங்க எல்லாம் ஏன் பேய் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்குறாங்கன்னு எனக்கு இன்னும் புரியல.அதுவும் இவரு ரொம்ப ஸ்பெஷல், பேய் கூட ஃபைட் எல்லாம் போடுறாரு.

சண்டைக் காட்சிக் அப்புறம், "எதையோ" தெளிச்சு பேயக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர்றாரு முஸ்லிம் பாய். அதுக்கு என்ன வேணும்னு கேட்க உண்மையெல்லாம் ஊர் மக்கள் முன்னாடி சொல்ல சொல்லுது பேய்.ஊரைஎல்லாம் கூட்டுறாரு (அதாவது கூப்புடறாரு, தொடப்பத்தால பெருக்கல) வில்லன்.

லாரன்ஸ ஒக்காத்தி வச்சு ஊர் மக்கள் முன்னாடி வித்தை காட்டுறாரு வில்லன். கூட்டம்னு வந்தா கூடிற்ராங்க நம்ம மக்களும். வில்லனும் உண்மையச் சொல்லிட்டு பணத்த திருப்பி மக்கஸ்ட்ட தர்றாரு. படையப்பால க்ரேனைட் கல்ல திருடி மணிவண்ணன்ட்ட காட்டுவானே ஒரு மாங்கொட்ட மூஞ்சி, அவன் பணமெல்லாம் வேணாம்ன்னு டைலாக் பேசிட்டு முனி மலையேருனதுக்கப்புறம் வாங்கப்பா முனி ஆசைய நெறவேத்தலாம்னு அதே பணத்த லவட்டிக்கிறான். கடைசி சீன்ல வந்து மறுபடியும் ஒட்டிக்குறாங்க நடிகை (இவங்க பேரும் தெரியாது,பாக்க நல்லாயிருக்கு மூஞ்சி மேக்கப் போட்டா மட்டும்).

படத்துல பாராட்ட வேண்டிய ஒரே ஆள், தயாரிப்பாளர்தான். தில் நெறயங்க அவருக்கு. ஊத்தி மூடுற படம்ன்னு முன்னாடியெ தெரிஞ்சும் எப்படித்தான் காசு தர்றாரோ. அத வச்சி நாலு நல்ல காரியம் பண்ணா புண்ணியமாவது கெடைக்கும்.

ராஜ்கிரண பத்தி சொல்ல எதுவுமே இல்ல, கடைசி சீன்ல ஏழடி எலைல இருக்கிற சோத்த வாய்க்குள்ள அமுக்குற அழக பார்க்க கண்ணு ரெண்ட ஏன்டா கொடுத்த சாமி.

Thursday 12 April, 2007

கட் அடிக்கலாம் வாங்க...

தலைப்ப பார்த்துட்டு எவனாவது, "வாடா மச்சா... செந்தில் அண்ணே கட் அடிக்க சொல்லித் தராரு"ன்னு தப்பா உள்ள பூந்திங்கண்ணா, 'யு' டர்ன் போட்டு திரும்பிப் பார்க்காமலே எஸ்-ஆயிடுங்க... இது "கட் அடிப்பது எப்படி"ன்ற பதிவு இல்லடா மச்சி...

நான் வழக்கம் போல ஏழாப்பு படிக்கும்போதுன்னு நெனைக்கிறேன். நல்லாப் படிக்குற பயதானே தவிர அறாத வாலு நான் எங்க ஸ்கூல்ல.(ஒங்க பேர்ல ஸ்கூல்லாம் இருந்த்தான்னு ஓல்ட் மொக்கையெல்லாம் போடப் படாது.) இப்ப ஒக்கார்ந்து இவ்ளோ டைப் பண்றேன், அப்ப்ல்லாம் ஸ்கூல்ல ஹோம் வொர்க் செய்யிறது கெடயாது, மச்சான் களையும் செய்ய விட்டதில்ல. ரெக்கார்ட் நோட்டு எழுதவே மாட்டேன். ஆறாவது ரெக்கார்ட் நோட்ட சன் டி.வி.-ல போட்ற "புத்தம் புதுசா" வச்சி பத்தாம் வகுப்புல யூஸ் பண்ணினத அதுல ரைட் போட்ட பத்தாப்பு வாத்தியாராலயே கண்டுபிடிக்க முடியல. நான் முதல்ல எழுதின ரெகார்டே பத்தாப்புலதான். வருஷா வருஷம் நோட்டு புக்கெல்லாம் வாங்கினவுடனே, அதுக்கு ட்ரெஸ் (ப்ரௌன் ஷீட்) பண்ணி பொட்டு வச்சி (லேபிள் ஒட்டி) திருஷ்ட்டி பொட்டும் வச்சி (அவய்ங்க பேரு லேபிலிள்), அழுக்கு பண்ற பயகளைப் பார்த்து இருப்பீங்க. ஆனா நான் அத அப்படியே வச்சி அடுத்த வருஷம் ஜூனியர் பசங்களுக்கு வித்துருவேன். ஏன்னா அவங்களுக்கு சப்ஜெட்டுக்கு ஒரு ரெகார்ட் பத்தாதாம்.அதுக்காகத்தான் நான் என் ரெகார்டக்கூட எழுதாம என்னோடத அவங்களுக்கு கொடுத்து வந்தேன்.எவ்வளவு நல்லவன் நான் இல்ல

திரும்ப ஏழாப்புக்குள்ள பூறுவோம். அன்னிக்கு முன்தின நாள், அறிவியல் வாத்தியார்,"நாளைக்கு வரும்போது எல்லாவனும் சயின்ஸ் ரெகார்ட எடுத்து வந்து ஸைன் வாங்கணும்"ன்னு சொல்லிட்டு போனாரு. (ஸைன் வாங்குறதுனாலதான் அதுக்கு சயின்ஸ்ன்னு பேரா? இந்த ஆராய்ச்சிய நாம அப்புறம் பார்க்கலாம்)...அவரு போனவுடனே (நல்லா படிக்குற எம்மேல பொறாமை கொண்ட) தோழர்கள் அடிச்ச கமென்ட்டுகள்,

1) நாளைக்கு செந்திலுக்கு ஆப்புடா.

2) செந்தில் நாளைக்கு புட்டத்த நல்ல தேத்திட்டு வாடா.(எங்க சயின்ஸ் வாத்தியாரோட ஸ்பெஷல் மசாலாவே, தப்பு பண்ணினதா தெரிஞ்சா பெஞ்சுக்கு கீழே குனியச்சொல்லி கும்மியடிச்சு (பிரம்பால) புட்டத்த பழுக்கடிச்சுருவாரு)

ஆனாலும் நான் ரொம்ப கூலாத்தான் இருந்தேன். நான் அடி வாங்கப் போரத நெனச்சி பயக அட்டகாசம் பண்ணாங்க. ஆனா மறுநாள் எல்லாமே உல்டாவாச்சு. அன்னிக்கு மதியம் வரைக்கும் எப்படி எஸ்ஸாகலாம்ன்னு மனசுக்குள்ளவே ப்ளான் போட்டுட்டு இருந்தேன். அன்னிக்குன்னு பார்த்து மூணாவது மாடில கட்டுரைப் போட்டி நடந்துண்டு இருந்துச்சு. மதியத்துக்கு மேல சயின்ஸ் க்ளாஸ கட்டடிச்சுட்டு கட்டுரைப் போட்டிக்கு எஸ்ஸாயிட்டேன். (தனியாத்தான்), தப்பு பண்ணும்போது கூட்டு, பொரியல்லாம் வச்சுக்கக்கூடாதுங்கறது என் கொள்கை. ரொம்ப நல்ல கொள்கை. இங்க கிருக்குற மாதிரி அங்கயும் கிறுக்கி ஆண்டு விழாவுல மூணாவது பரிசு வாங்கினேன். பயக செம காண்டுல இருந்தானுங்க,"பரதேசி நாயி, ரெகார்ட்ல எஸ் ஆனது மட்டும் இல்லாம, கட்டுரைப் போட்டில தேர்ட் ப்ரைஸ் வேற இவனுக்கு."

அதவிடக் கொடுமை அதே ஆண்டு விழாவுல எப்பவுமே நான் வாங்குற நல்லொழுக்க மாணவனுக்கான பரிசும் எனக்குதான். அதுக்கு காரணம் எங்க தமிழ் வாத்தியார், ஸ்கூல்ல இருக்குர ஒரே நல்லொழுக்க மாணவனைத் தேர்ந்தெடுக்கறது அவர்தான்ங்கறது, எங்க ஸ்கூல்லயே என்னைத் தவிர எந்த மாண்புமிகு மாணவனுக்கும் தெரியாத சிகரெட் ச்சீ சீக்ரெட். இதக் கண்டுபிடிக்கப் போட்ட பல திட்டங்கள்ல தோற்றாலும் சிம்பு மாதிரி இல்ல சிம்பு சொல்ற மாதிரி கடைசில ஜெயிச்சது என்னோட விடா முயற்சிதான். இத்ல இன்னொரு கொடுமை (வழுக்கையே ச்சீ வாழ்க்கையே கொடுமைதானய்யா), அவருதான் அந்த "செலக்டட் ஒன்"ஐத் தேர்ந்தெடுக்குறார்ன்னு தெரியாம மற்ற மாணவர்கள்லாம் அவர சீண்டி சொறிஞ்சு ரத்தம் பார்த்துக்கிட்டு இருந்தானுங்க அந்த முட்டாப் பயக.

எல்லா வாத்தியாரையுமே பட்டப்பேரிட்டு கூப்ட்டு சுண்ணாம்பு போட்டு சொறியுற நான் அவருகிட்ட மட்டும் பவ்யமா பம்முறத எந்த மானங்கெட்ட மாணவனும் கண்டுக்கல. அது எனக்கு நல்லதாப் போச்சி. தொடர்த்து 5 வருஷம் (6 - 10 ம் வகுப்பு) நல்லொழுக்க மாணவன்ற ரெகார்ட அந்த ஸ்கூல்ல இனி யாராலும் ஒடைக்க முடியாது.

அது ஒன்னுதான் நான் ஒழுங்காப் பண்ண ரெகார்ட். இதுலேர்ந்தே புரிஞ்சுக்கோங்க மக்கா, எவனும் கரணமில்லாம யார்கிட்டெயும் பம்ம மாட்டானுங்க. இந்த இடத்துல ஒரு தொடரும் டயலாக் போடணுமே.

ம்ம்ம்... இதுதான் நீங்கள் பம்ம வேண்டிய இரகசியம்...(சத்குரு ஜக்கி வாசுதேவ்-வோட தொடரும் டயலாக்). நாந்தான் களவானியாச்சுங்களே?!!!

முதல் நடனம்

இதுவும் அதே மூணாப்பு படிக்கும்போது படிச்ச ட்யூஷன்ல நடந்தது தான்.

அது தம்மாத்தூண்டு ட்யூஷந்தான்னாலும், அதோட தலைவர் ஆண்டு விழாவ ரொம்ப சிற்ப்பா கொண்டாடுவார். நான் சேர்ந்ததுக்கப்புறம் வந்த முதல் விழாவுக்கு ஒரு கல்யாண மண்டபத்த புக் பண்ணி, அங்க நடன நிகழ்ச்சியெல்லாம் நடத்திறதுக்கு ஏற்பாடு பண்ணினாரு.( இது கண்டிப்பா நான் சேர்ந்ததுக்காக கெடயாதுங்கறதுன்னு எனக்குத் தெரியும்)_

யார் யாரெல்லாம் டான்ஸ் ஆடப்போறான்னு.. ஸார் கேட்டாரு, என் பக்கத்துல ஒக்காந்த பேரிக்கா மண்டைய (என் ஃப்ரெண்ட்டுதான்) என்னய பத்தி என்னவோ நல்லா தெரிஞ மாதிரி, "ஸார் செந்தில் நல்லா டான்ஸ் ஆடுவான்"ன்னு ஒரு பிட்ட தூக்கிப் போட்டான் அந்தப் பன்னாட.

அந்த மக்கு வாத்தியாரும், நம்ம அர்ஜுன் வாத்தியாரு மாதிரியோ, இல்ல நம்ம சத்யராஜ் மாதிரி வெவரமான ஆளோ கெடயாது. நார்மலா ஸாருங்க சொல்ற "ஒனக்கு தெரிஞ்சா ஆட்றா நாயே, மத்தவன ஏன் கோத்து விடற"ன்னு கேக்காம மாட்ணான்டா ஒருத்தன்னு என்னய கூப்டாரு.
"வாடா ராமா, ஆட்றா ராமா"ன்ற மாதிரி, அந்த பனங்கொட்ட மண்டையும் என்னய, "வாடா செந்தில் ஆட்றா செந்தில்"ன்னான்.

நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி கை காலெல்லாம் ஆட்டினேன். பரதேசி நாய்ங்க இதையும் ஒக்காந்து ரசிச்சானுங்க, இல்ல பார்த்தானுங்க...

முதல்ல "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) பாட்டுக்குத்தான் ஆடணும்ன்னு இருந்தது, ஆனா எங்களுக்கு இடுப்ப ஒலுங்கா ஆட்ட்த் தெரியலன்னு சொன்னான் அந்த தகர டப்பா டான்ஸ் மாஸ்டர். (அந்த டுபாகூருக்கு சிம்ரன் மாதிரி ஆட்டணும் போல.. அப்ப சிம்ரன்லா இல்ல அது வேற விஷயம்)

ஏண்டா ஆடத் தெரியாதவன எந்தப் பாட்டுக்கு ஆடவுட்டாலும் ஒரே மாதிரித் தானடா இருக்கும். கடைசியா நம்ம கேப்டன் நடிச்ச "கேப்டன் ப்ரபா." படத்துல "ஆட்டமா தேரோட்டமா" பாட்டுக்கு எங்கள ஓட விட்டாங்க ச்சீ ஆடவிட்டாங்க ஆனா நான் ஓடத்தான் செஞ்சேன். சில எடத்துல பம்முனேன். சில எடத்துல நம பாக்யராஜ் ஸார் மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணேன். (ஆமா அவர ஆடச்சொன்னா எக்ஸர்சைஸ்தானே பண்ணுவாரு).

டான்ஸ் க்ளாஸ்னு சொல்லி எங்கள அந்த டான்ஸ் மாஸ்டெர் பண்ன கொடுமை இருக்கே யப்பா கோராமை.. அதெல்லாம் வேணா உங்களுக்கு, அழுவீங்க. சீரியல எவனோ எழுத்றான்டின்ட்டு வாங்கடி அங்க போயி அழுவலாம், லேடீஸ் ல்லாம் என் பதிவ படிக்க வந்திருவாங்க.

அந்த ஆண்டு விழாவும் வந்தது. அதுல அந்த டான்ஸ் மாஸ்டர் மண்டையந்தான் படத்துல வர்ற மன்சூர் அலிகானோட வேஷம் போட்டான்... மவனே அவன வெஷம் வச்சில்ல கொல்லணும். ஒரு பொய்த் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு, நாங்க ஆடும் போது இல்ல ஆட்டும்போது (கைய காலத்தான்).. வீரப்பன் மாதிரி குறுக்க குறுக்க பூந்து எங்கள பயமுறுத்தினான். அவனுக்கும் எங்களுக்கும் ஆறு இல்ல ஒரே ஒரு வித்தியாசந்தான். நாங்கல்லாம் நின்னுக்கிட்டே ஆட்டினோம். ஆனா அவன் ஓடிக்கிட்டே ஆட்டினான். அந்த க்ரூப்லேயும், ஒரு தடித் தாண்டவராயன் இருந்தான். பேருதான் தாண்டவராயன் அவனெல்லாம் தாண்டவம் ஆடினா உலகம் இல்ல யூனிவர்ஸே தாங்காது. அவன் மட்டும் ஆடாம ஆட்டாம யானை மாதிரி காலை மாத்தி மாத்தி அசஞ்சான்.

ஒரு வழியா அந்த ஆண்டு எழவ ச்சீ விழாவ ஆட்டி அழுது முடிச்சோம், ஆனால் அதுக்கப்புறம் என்னய போட்டுக்கொடுத்த அந்த பேரிக்கா மண்டையன தெருத் தெருவா தொரத்தி அடிச்ச அடிச்ச அடி இருக்கே சொல்லி மாளாதுங்ண்ணா.
இப்பவும் நான் ரூம்ல தனியா இருக்கும் போது... தனுஷ் மாதிரி ஃபேன ஃபாஸ்டா வச்சி ஆடாம, ஸ்லோவா வச்சி ஆடுவேன் (ஆட்டுவேன்)... ரூம்ல தனியா ஆட்றதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் (அதுவும் பாட்டை சவுண்டா வச்சி. அதெல்லாம் தனி சுகம் ஆடாதவங்க ட்ரை பண்ணி பாருங்க...
எனக்கு மட்டும் இல்ல உலகத்துல நெறய பேரு அப்படித்தான் இல்ல...

Wednesday 11 April, 2007

ஞாபகம் வருதே...

என்னோட சின்ன வயசுல நடந்த சில காமெடியான சம்பவங்கள். இதெல்லாம் மொக்கை இல்லீங்க நானே மெய்யாலுமே அறியாத வயசுல தெரியாம பண்ண காமெடிகள்.

ஒரு 5 வயசு இருக்கும்... ஸ்கூல் விட்டு வந்தா பய வீட்டுல கபடி விளையாடி வீட்டுக்காரம்மாவோட சண்டை வளிச்சி விடுறாண்ட்டு எங்கம்மா ப்ரைவேட் (அதாவது ட்யூஷன் ) -ல சேர்த்தாங்க.

ட்யூஷன் -ல முதல் நாள் சார் என்னை கூப்புட்டு, என் ஸ்லேட்-ல கீழ இருக்குர மாதிரி எழுதி பெருக்கல் கணக்கு போடச் சொன்னாரு.

12x12
-------
_____

நான் அவரு கிட்ட ஸ்லேட்ட திருப்பி கொடுத்து, எங்க டீச்சர் இப்படிப் போடத்தான் சொல்லிக் கொடுந்தாங்கண்னு கீழ இருக்குர மாதிரி திருப்பி எழுதிக் காட்டினேன்.

12
x12
----
----
மனுஷன் டென்ஷனாகி, "ரெண்டுமே ஒன்னுதாம்ப்பா தம்பி"ன்னு சொல்லி ஒரு மணி நேரம், எப்படி செய்யணும்னு விளக்கம் கொடுத்தாரு.

அதப்பத்தி என் நண்பன்ட்ட பெருமையா வேற சொன்னேன்.."இன்தாளுக்கு பெருக்கல் கணக்கு கூடத் தெரியலடா மச்சான்".

மறுநாள் சாயந்திரம், அதே சார் என்னய கூப்ட்டு என்னோட கற்பழியாத ஹோம் வொர்க் நோட்-ல முதல் பக்கத்துல என் பேரை எழுதி, 3-ம் பக்கம் டாப்-ல க முதல் ன வரை எழுதனுங்கிறதுக்காக "க to ன"ன்னு எழுதினாரு.

என் திமிரு நான் வீட்ல போயி எல்லார்க்கிட்டேயும், என்னோட முதல் ஹோம் வொர்க்கை காட்டிட்டு எழுத உக்காந்தேன். மறுநாள் அவருகிட்ட காட்டும் போது எமகாதகப் பய இன்னிக்கு என்னத்தக் காட்டப் போரானோங்கற மாதிரி என்னய மொறைச்சிக்கிட்டே என் கைல இருக்கிற நோட்ட வாங்கிப் பார்த்துட்டு நொந்துப் போய்ட்டாரு பாவம். நான் எழுதி இருந்தது,

க to ன
க to ன
க to ன
க to ன

அவரு எழுதினத அப்படியே...

எனக்கு அப்ப english எல்லாம் தெரியாது, நானே கார்ப்பரேஷன் ஸ்கோல் பய எனக்குத் தெரிஞ்சத புரிஞ்த எழுதி வச்சேன்...

மறு நாளும் என் ரூபத்திலேதான் அவருக்கு 7.5 சனி...

என்னய கூப்பிட்டு ஆனா.. ஆவன்னா... தெரியுமாடா செந்தில்,ன்னார்
நான், "தெரியாது சார் எனக்கு தெரிஞ்சது அ.ஆ.இ.ஈ"ன்னேன் கூலாக.

மனுஷன் நொந்து நூலாகி, வெந்து நூடுல்ஸ் ஆகி, என்னய அந்த குட்டி ட்யுஷன்லேயே இன்னொரு டெபார்ட்மென்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டார்...

தொடரும் எனது அலுசாட்சியம்....